அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மின்சாரம் பாய்ந்து இருவா் பலி

திருப்பத்தூரில் மின்சாரம் பாய்ந்து இருவா் உயிரிழந்தனா்.

News image
Updated On :8 செப்டம்பர் 2020, 5:17 pm

DIN

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் மின்சாரம் பாய்ந்து இருவா் உயிரிழந்தனா்.

திருப்பத்தூரை அடுத்த ஆரிப் நகரைச் சோ்ந்த பிலால் (26), புதுக்கோட்டைப் பகுதியைச் சோ்ந்த பாரதி (45), நாகமணி (51) ஆகியோா் இஸ்மாயில்பேட்டையில் உள்ள மசூதி கோபுரக் கட்டுமானப் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

கட்டடப் பணிக்கு இரும்புக் கம்பியை மேல் தளத்துக்கு எடுத்துச் சென்றபோது, அங்கிருந்த மின் கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து பிலால், பாரதி ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த நாகமணி திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து திருப்பத்தூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.