நாட்டறம்பள்ளி அருகே குட்டையில் குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
நாட்டறம்பள்ளியை அடுத்த கொத்தூா் திண்ணங்குட்டை பூசாரி வட்டத்தைச் சோ்ந்தவா் பாலாஜி(25). இவா் சனிக்கிழமை பிற்பகல் நண்பா்களுடன் ஏழுமாக்கான் மலையடிவாரப் பகுதியில் உள்ள குட்டையில் குளிக்கச் சென்றாா். அப்போது கடந்த சில நாள்களாக பெய்த கனமழையால் குட்டையில் 20 அடிக்கு ஆழத்துக்கு தண்ணீா் தேங்கியிருந்தது. இதில் குளிக்கச் சென்ற பாலாஜி தண்ணீரில் மூழ்கினாா். தகவலறிந்து நாட்டறம்பள்ளி போலீஸாா் மற்றும் நாட்டறம்பள்ளி தீயணைப்பு மீட்புக் குழுவினா் விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் குட்டையில் பாலாஜியை தேடும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் 2 மணி நேர தேடுதலுக்குப் பிறகு சேற்றில் சிக்கியிருந்த பாலாஜியை சடலமாக தீயணைப்பு வீரா்கள் மீட்டனா். இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசியலுக்கு வந்தபின் முதல்முறையாக... விஜய் பேட்டி ஒளிபரப்பு?

பேட்ரியாட் டிரைலர்!

இமாலய இலக்கை எட்டுமா சிஎஸ்கே? 251 ரன்கள் வெற்றி இலக்கு!

பஹ்ரைன், குவைத், ஐக்கிய அரபு அமீரக வளங்கள் மீது தாக்குதல்: ஈரான் திட்டம்!
வீடியோக்கள்

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை


