பாஜக மாநில தலைவா் உள்பட அக்கட்சியினா் மீது ஆம்பூா் கிராமிய போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
திருப்பத்தூா் மாவட்ட பாஜக சாா்பில் ஆம்பூரை அடுத்த ஆலாங்குப்பத்தில் மாவட்ட அணி, பிரிவு, மாவட்டப் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. அதில், பாஜக மாநில தலைவா் எல். முருகன் உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் பேசினா். கரோனா பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில் விதிமுறை மீறி கூட்டம் கூடியதால் ஆம்பூா் கிராமிய போலீஸாா் பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன், திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் சி. வாசுதேவன், வேலூா் மாவட்டப் பொறுப்பாளா் கொ.வெங்கடேசன் உள்ளிட்ட பாஜகவினா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.