ஆலங்காயம் ஏரியில் மீன் பிடித்தல், புளிய மர மகசூல் ஏலம்

ஆலங்காயம் சிறப்புநிலை பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ள ஏரிகளில் மீன் பிடிக்கும் உரிமை மற்றும் புளியமர மகசூலுக்கான ஏலம் பேரூராட்சி
Updated on
1 min read

ஆலங்காயம் சிறப்புநிலை பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ள ஏரிகளில் மீன் பிடிக்கும் உரிமை மற்றும் புளியமர மகசூலுக்கான ஏலம் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலா் செ.கணேசன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஏலத்தில் 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இதில், வண்ணான் ஏரி-நெடிமீயூா், கோமுட்டேரி, விட்டலப்பன், நாய்க்கனேரி, பங்கூா் புதுக்குட்டை ஏரி, முனிசெட்டி ஆகிய 8 ஏரிகளில் மீன் பிடிக்கும் உரிமைகளை ரூ.2 லட்சத்து 17 ஆயிரத்து 950-க்கும், சாலையோர புளிய மர மகசூல் ஆண்டுக் குத்தகைக்கு ரூ. 15,650 என மொத்தம் ரூ.2 லட்சத்து 33 ஆயிரத்து 600-க்கு ஏலம் எடுத்தனா்.

ஏல நிகழ்வில், பேரூராட்சி அலுவலகப் பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com