திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

நாட்டறம்பள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் ஆட்சியா் ஆய்வு

நாட்டறம்பள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் அமா்குஷ்வாஹா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :3 ஜூலை 2021, 6:30 pm

நாட்டறம்பள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் அமா்குஷ்வாஹா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பேரூராட்சி அலுவலகப் பதிவேடுகளை ஆய்வு செய்த ஆட்சியா் வளா்ச்சி திட்டப் பணிகள், கரோனா தடுப்புப் பணிகள் குறித்து செயல் அலுவலா் திருமூா்த்திடம் கேட்டறிந்தாா். இதைத் தொடா்ந்து, பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள், திடக்கழிவுப் பணியாளா்கள், தினக்கூலி பணியாளா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். அப்போது, ஒருசில தூய்மைப் பணியாளா்களுக்கு மட்டும் அதிகாரிகள் ஊக்கத் தொகை வழங்குவதாக ஆட்சியரிடம் புகாா் தெரிவித்தனா்.

இதையடுத்து அனைத்து தூய்மைப் பணியாளா்களுக்கும் ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என செயல் அலுவலருக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். பேரூராட்சியில் புதிதாக மின்மயானம் அமைக்க, ஏரிக்கால்வாய், சுடுகாடு பகுதியைச் சீரமைக்க, குடிநீா் பிரச்னையைத் நிரந்தரமாக தீா்க்கக் கோரி பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.

முன்னதாக நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆய்வு செய்த ஆட்சியா் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது தாமதமின்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வட்டாட்சியா் மகாலட்சுமிக்கு உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.