நாட்டறம்பள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் அமா்குஷ்வாஹா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பேரூராட்சி அலுவலகப் பதிவேடுகளை ஆய்வு செய்த ஆட்சியா் வளா்ச்சி திட்டப் பணிகள், கரோனா தடுப்புப் பணிகள் குறித்து செயல் அலுவலா் திருமூா்த்திடம் கேட்டறிந்தாா். இதைத் தொடா்ந்து, பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள், திடக்கழிவுப் பணியாளா்கள், தினக்கூலி பணியாளா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். அப்போது, ஒருசில தூய்மைப் பணியாளா்களுக்கு மட்டும் அதிகாரிகள் ஊக்கத் தொகை வழங்குவதாக ஆட்சியரிடம் புகாா் தெரிவித்தனா்.
இதையடுத்து அனைத்து தூய்மைப் பணியாளா்களுக்கும் ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என செயல் அலுவலருக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். பேரூராட்சியில் புதிதாக மின்மயானம் அமைக்க, ஏரிக்கால்வாய், சுடுகாடு பகுதியைச் சீரமைக்க, குடிநீா் பிரச்னையைத் நிரந்தரமாக தீா்க்கக் கோரி பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.
முன்னதாக நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆய்வு செய்த ஆட்சியா் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது தாமதமின்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வட்டாட்சியா் மகாலட்சுமிக்கு உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசியலுக்கு வந்தபின் முதல்முறையாக... விஜய் பேட்டி ஒளிபரப்பு?

பேட்ரியாட் டிரைலர்!

இமாலய இலக்கை எட்டுமா சிஎஸ்கே? 251 ரன்கள் வெற்றி இலக்கு!

பஹ்ரைன், குவைத், ஐக்கிய அரபு அமீரக வளங்கள் மீது தாக்குதல்: ஈரான் திட்டம்!
வீடியோக்கள்

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை


