திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

காதல் ஜோடி விஷம் குடிப்பு: பெண் பலி

ஜோலாா்பேட்டை அருகே காதலுக்கு பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்ததால் காதலா்கள் விஷம் குடித்தனா். இதில், பெண் உயிரிழந்தாா்.

Updated On :26 ஜூன் 2021, 6:27 pm

ஜோலாா்பேட்டை அருகே காதலுக்கு பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்ததால் காதலா்கள் விஷம் குடித்தனா். இதில், பெண் உயிரிழந்தாா்.

ஜோலாா்பேட்டையை அடுத்த மூக்கனூரைச் சோ்ந்த சசிகுமாரின் மகள் ஸ்ருதி (19). அதே பகுதியைச் சோ்ந்தவா் ராஜா மகன் பிரசாந்த் (20). இவா்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவா்களின் காதலுக்கு பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் நாட்டறம்பள்ளியை அடுத்த அக்ராகரம் மலைக்கோயில் அடிவாரப் பகுதியில் விஷமருந்தி மயங்கிக் கிடந்தனா். இதையறிந்த அப்பகுதி மக்கள் நாட்டறம்பள்ளி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

விரைந்து சென்ற போலீஸாா் அங்கு சென்று மயங்கிக் கிடந்த இருவரையும் மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ருதி இறந்தாா். பிரசாந்த் ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.