மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

ஆம்பூர் அருகே மக்கள் சாலை மறியல் 

தேங்கிய மழைநீரை அகற்றக் கோரி ஆம்பூர் அருகே துத்திப்பட்டு ஊராட்சி அம்பேத்கர் நகர் பகுதியில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

News image
ஆம்பூர் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்.
Updated On :22 நவம்பர் 2021, 6:04 am

DIN

தேங்கிய மழைநீரை அகற்றக் கோரி ஆம்பூர் அருகே துத்திப்பட்டு ஊராட்சி அம்பேத்கர் நகர் பகுதியில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை தொடங்கி தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் ஏரிகளில் இருந்து வெளியேறிய வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது.

அதனால் ஆம்பூர் அருகே தேவலாபுரம் ஊராட்சியில் துத்திப்பட்டு ஊராட்சி பெரியவருக்கும் ஊராட்சி உட்பட்ட கிராமங்களில் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து கடந்த 4 நாட்களாக தேங்கி வருகிறது. 

அதனால் குடியிருப்புப் பகுதிகளை விட்டு வெளியேறி பொது மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வடியாமல் இருப்பதாலும் நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரி தண்ணீரை அகற்ற கோரியும் பொதுமக்கள் தொடர்ந்து தினமும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வழக்கம்போல திங்கட்கிழமை காலை பொதுமக்கள் துத்திப்பட்டு ஊராட்சி அம்பேத்கார் நகர் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தை துவங்கினர்.

மறியல் காரணமாக போக்குவரத்து முடங்கியது. அதனால் பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.