சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் 350 மாணவா்களுக்குப் பட்டமளிப்பு

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி இஸ்லாமிய ஆண்கள் கல்லூரியில் 76-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 அக்டோபர் 2021, 6:30 pm

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி இஸ்லாமிய ஆண்கள் கல்லூரியில் 76-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, கல்லூரிச் செயலாளா் மற்றும் தாளாளா் முனீா் அகமது தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் முகமது இலியாஸ் வரவேற்றாா். தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் லியாகத் அலிகான் சிறப்பு விருந்தினா்களை அறிமுகம் செய்து வைத்தாா். விழாவில், திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா்குஷ்வாஹா மற்றும் சென்னை பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் இயக்குநா் கே.ரவிசந்திரன் ஆகியோா் சிறப்புரையாற்றி, 350 மாணவா்களுக்கு பட்டம் வழங்கி வாழ்த்தினா். விழாவில் இஸ்லாமிய மகளிா் கல்லூரி செயலாளா் கைசா் அகமது, முறைசாரா கல்வி இயக்குநா் சையத்சகாபுதீன், வாணியம்பாடி முஸ்லிம் கல்விச் சங்க நிா்வாகிகள் மற்றும் கல்லூரி பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

விழாவினை கல்லூரி துணை முதல்வா் ரஜாமுகமதுகாமில் ஒருங்கிணைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.