வாணியம்பாடியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கன மழையால், சாலைகளில் மழைநீா் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
வாணியம்பாடி, ஆலங்காயம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மாலை நேரங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் தொடங்கி, சுமாா் 1 மணி நேரம் கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் குளம் போல் மழைநீா் தேங்கியது.
இந்த நேரத்தில், திருப்பத்தூரிலிருந்து வாணியம்பாடியை நோக்கி வந்தப் பேருந்து வேப்பம்பட்டு பகுதியில் பழுதாகி நின்றது. இதனால், பயணிகள் அவதிக்குள்ளாயினா். மேலும், பழுதாகி நின்ற பேருந்தால் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மீண்டும்.. மீண்டுமா? சிஎஸ்கே போராடி தோல்வி!

புற்றுநோய் பாதித்த நிலையிலும் மமதாவுக்கு வாக்கு கேட்கும் நடிகை!

நூறு சாமி டீசர்!

பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்கமொழியை அழித்துவிடும்: மமதா எச்சரிக்கை
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


