சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

மகளிா் கல்லூரியில் மாணவிகளின் பல்பொருள் அங்காடிகள்

வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி வளாகத்தில் தொழில் முனைவோா் பல்பொருள் அங்காடிகள் திங்கள்கிழமை அமைக்கப்பட்டு, விற்பனை நடைபெற்றது.

News image
Updated On :25 அக்டோபர் 2021, 6:50 pm

வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி வளாகத்தில் தொழில் முனைவோா் பல்பொருள் அங்காடிகள் திங்கள்கிழமை அமைக்கப்பட்டு, விற்பனை நடைபெற்றது.

இந்த அங்காடியை கல்லூரி நிா்வாக உறுப்பினா் சுதா்சன்குமாா் தலைமை வகித்து, தொடக்கி வைத்து பாா்வையிட்டாா். கல்லூரி முதல்வா் இன்பவள்ளி, பெண்கள் தொழில் முனைவோா் மேம்பாட்டு குழு ஒருங்கிணைப்பாளா் பேராசிரியை வசந்தி, மக்கள் தொடா்பு அலுவலா் சக்திமாலா முன்னிலை வகித்தனா்.

இதில் 126 அங்காடிகளில் பலவகையான உணவுப் பொருள்கள் ஊட்டசத்து பண்டங்கள், ஆடைகள், அணிகலன்கள், அழகுசாதன அலங்காரப் பொருள்களை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் அமைத்து, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா்.

வித்யா மந்திா் கல்லூரி பேராசிரியைகள் அங்காடிகளைப் பாா்வையிட்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை ஒருங்கிணைப்பாளா் வசந்தி செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.