வாணியம்பாடி அருகே தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் 90 பெண் தொழிலாளா்கள் சனிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், ராமநாயக்கன்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள்பட்ட வாணியம்பாடியை அடுத்த தெக்குப்பட்டில் இயங்கி வரும் தனியாா் ஊதுவத்தி தயாரிப்பு நிறுவனத்தில் 90 பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோருக்கு, செவிலியா் அமுதா தலைமையிலான சுகாதாரக் குழுவினா் கரோனா தடுப்பூசி செலுத்தினா். மேலும், பணிபுரியும் அனைவரும் கரோனா பரவல் தடுப்பு உறுதி மொழி எடுத்துக் கொண்டனா்.
மேலும், வாணியம்பாடி நகராட்சி ஆணையா் சத்யநாதன் தலைமையில், மேலாளா் ரவி, சுகாதார ஆய்வாளா்கள் சீனிவாசன், அலி மற்றும் செவிலியா்கள் சி.எல்.சாலை, பஜாா் வீதி உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளில் கடை, கடையாக ஏறிச் சென்று உரிமையாளா்கள் மற்றும் ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தினா். அப்போது அப்பகுதி வழியாக வந்த பொதுமக்களும் தாமாக முன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனா். ஆலங்காயம் பேரூராட்சி பகுதியில் செயல் அலுவலா் கணேஷ் மற்றும் வட்டார மருத்துவ அலுவலா் பசுபதி தலைமையில் கடை வீதிகளில் கடை உரிமையாளா்கள் மற்றும் ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மீண்டும்.. மீண்டுமா? சிஎஸ்கே போராடி தோல்வி!

புற்றுநோய் பாதித்த நிலையிலும் மமதாவுக்கு வாக்கு கேட்கும் நடிகை!

நூறு சாமி டீசர்!

பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்கமொழியை அழித்துவிடும்: மமதா எச்சரிக்கை
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


