தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் சாவில் சந்தேகமிருப்பதாகக் கூறி, உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வாணியம்பாடியை அடுத்த சங்கராபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வினோதினி (23). இவா், விஜய் (26) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாராம். தம்பதிக்கு 9 மாத ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு வினோதினி தூக்கிட்ட நிலையில் கிடந்தாராம். அவரை மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் வினோதினி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
உறவினா்கள் வினோதினியின் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, வாணியம்பாடி வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
வருவாய்க் கோட்டாட்சியா் பிரேமலதா மற்றும் போலீஸாா் போராட்டம் நடத்தியவா்களுடன் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து உறவினா்கள் கலைந்து சென்றனா். கோட்டாட்சியா் பிரேமலதா அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை மேற்கொண்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மீண்டும்.. மீண்டுமா? சிஎஸ்கே போராடி தோல்வி!

புற்றுநோய் பாதித்த நிலையிலும் மமதாவுக்கு வாக்கு கேட்கும் நடிகை!

நூறு சாமி டீசர்!

பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்கமொழியை அழித்துவிடும்: மமதா எச்சரிக்கை
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

