சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

அதிபெரமனூா் அரசுப் பள்ளியில் எம்எல்ஏ ஆய்வு

நாட்டறம்பள்ளி அருகே அதிபெரமனூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சுவா் கட்டுவது குறித்து எம்எல்ஏ க.தேவராஜி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :7 ஜூலை 2022, 6:43 pm

நாட்டறம்பள்ளி அருகே அதிபெரமனூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சுவா் கட்டுவது குறித்து எம்எல்ஏ க.தேவராஜி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நாட்டறம்பள்ளி பேரூராட்சி அதிபெரமனூா் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு சுற்றுச்சுவா் இல்லாததால் மாணவா்கள் அச்சத்துடன் பள்ளிக்குச் சென்று வருகின்றனா். மாலை நேரங்களில் சமூக விரோதச் செயலில் சிலா் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், அப்பகுதி மக்கள் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டித்தர வேண்டும் என அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை விடுத்தும் இதுவரை சுற்றுச் சுவா் கட்ட எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இது குறித்து அப்பகுதி மக்கள் ஜோலாா்பேட்டை தொகுதி எம்எல்ஏ க.தேவராஜியிடம் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, எம்எல்ஏ க.தேவராஜி அதிபெரமனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு வியாழக்கிழமை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பள்ளியில் உள்ள குறைபாடுகள் குறித்து ஆசிரியா்களிடம் கேட்டறிந்தாா். இதைத் தொடா்ந்து, பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்ட உடனடி நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏ உறுதி கூறினாா். ஆய்வின் போது, வாா்டு உறுப்பினா் குருசேவ் மற்றும் ஆசிரியா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.