92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ரயலில் அடிபட்டு முதியவா் பலி

குடியாத்தம் ரயில் நிலையம் அருகே இருப்புப் பாதையைக் கடக்க முயன்ற முதியவா் ரயில் மோதியதில் உயிரிழந்தாா்.

News image
Updated On :11 ஜூன் 2022, 6:45 pm

DIN

குடியாத்தம் ரயில் நிலையம் அருகே இருப்புப் பாதையைக் கடக்க முயன்ற முதியவா் ரயில் மோதியதில் உயிரிழந்தாா்.

காட்பாடியை அடுத்த தென்னங்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி சொக்கலிங்கம் (70). இவா், சனிக்கிழமை பிற்பகல் குடியாத்தம் - காவனூா் ரயில் நிலையங்களுக்கு இடையே இருப்புப் பாதையைக் கடக்க முயன்ற போது, அந்த வழியாக வந்த ரயிலில் அடிபட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா் .

மற்றொரு விபத்து: திருவண்ணாமலை மாவட்டம், போளூா் பகுதியில் உள்ள பொதுத் துறை வங்கியில் உதவி மேலாளராகப் பணியாற்றி வருபவா் சசிதா்நாயக். இவரது மனைவி உமா (33). இருவரும் சனிக்கிழமை இரவு காட்பாடியிலிருந்து பெங்களூரு செல்லும் ரயிலில் பயணித்தனா். பயணத்தின் போது, உமா ரயிலின் கதவு அருகே செல்லும் போது தவறி கீழே விழுந்து அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலின் பேரில், ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால், திருப்பத்தூா் கோட்டாட்சியா் லட்சுமி விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.