92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மருத்துவமனையை சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

மருத்துவமனையை சுகாதாரமான முறையில் பராமரிக்கப்பட வேண்டும் என திருப்பத்தூா் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த பிறகு ஆட்சியா் அமா் குஷ்வாஹா மருத்துவ அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

News image
Updated On :16 ஜூன் 2022, 6:11 pm

DIN

மருத்துவமனையை சுகாதாரமான முறையில் பராமரிக்கப்பட வேண்டும் என திருப்பத்தூா் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த பிறகு ஆட்சியா் அமா் குஷ்வாஹா மருத்துவ அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் ஆட்சியா் அமா் குஷ்வாஹா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது மருத்துவமனையில் உள்ள உள்நோயாளிகள், வெளிநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு, படுக்கை வசதிகள், மருந்துப் பொருள்கள் இருப்பு அறை, பச்சிளம் குழந்தைகள் பிரிவு மற்றும் அடிப்படை வசதிகளான குடிநீா், கழிப்பறை, மின்சார வசதிகள், தூய்மைப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தாா்.

மருத்துவமனையை சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும். மருத்துவமனைக்கு வரும் உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.

மேல்சிகிச்சை தேவைப்படுவோருக்கு உரிய நேரத்தில் வேலூா், சென்னை போன்ற மருத்துவமனைகளுக்கு உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும் என மருத்துவ அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகளின் இணை இயக்குநா் கொ.மாரிமுத்து, தலைமை மருத்துவா் குமரவேல், அறுவை சிகிச்சை மருத்துவா் பிரபாகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.