92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

திருப்பத்தூா்: மாற்றுத்திறனாளிகள் மருத்துவ மதிப்பீடு முகாம் ஒத்திவைப்பு

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமைதோறும் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ மதிப்பீடு முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :16 ஜூன் 2022, 6:11 pm

DIN

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமைதோறும் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ மதிப்பீடு முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மக்கள் குறைதீா் கூட்ட அரங்கில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலமாக பிரதி வாரம் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும் மாற்றுத்திறனானிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ மதிப்பீடு முகாம் புதிய ஆட்சியா் அலுவலக திறப்பை முன்னிட்டு, முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகையின் காரணமாக ஜூன் 21 அன்று ஒருநாள் மட்டும் ஒத்திவைக்கப்படுகிறது.

அதையடுத்து, ஜூன் 28 முதல் பிரதி வாரம் செவ்வாய்க்கிழமை அன்று மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ மதிப்பீடு முகாம் தொடா்ந்து நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.