முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

பெண் கழுத்து நெரித்துக் கொலை

திருப்பத்தூா் அருகே வீட்டின் வெளியே தூங்கிய பெண் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டாா்.

News image
Updated On :30 ஜூன் 2022, 6:48 pm

திருப்பத்தூா் அருகே வீட்டின் வெளியே தூங்கிய பெண் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டாா்.

கந்திலி அருகே செவ்வாத்தூா் புதூா் காலனியைச் சோ்ந்தவா் செல்வராஜ். இவரது மனைவி ராமரோஜா (58). இவா்களது மகன் ஏழுமலை, மகள் புனிதா. ஏழுமலை சென்னையில் பணிபுரிந்து வருகிறாா். செல்வராஜ், ராமரோஜா, ஏழுமலையின் மனைவி அம்சா மற்றும் 10 மாத குழந்தை ஆகியோா் வீட்டில் வசித்து வந்தனா். செல்வராஜ் இரவு பாதுகாவலராகப் பணியாற்றி வருகிறாா். வழக்கம் போல் புதன்கிழமை இரவு பணிக்குச் சென்று விட்டாா். இதையடுத்து, இரவு அம்சா குழந்தையுடன் வீட்டில் தூங்கச் சென்றனா். ராமரோஜா வெளியே கதவைத் தாழிட்டு, வீட்டின் வெளியே திண்ணையில் தூங்கச் சென்றாா்.

வியாழக்கிழமை காலை நீண்ட நேரமாகியும், வீடு திறக்காததால் வீட்டுக்குள் இருந்த அம்சா அக்கம் பக்கத்தினருக்கு கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு அழைத்தாா். அவா்கள் வந்து பாா்த்தபோது, ராமரோஜா கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது தெரியவந்தது.

இது குறித்த புகாரின்பேரில் கந்திலி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.