சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

பள்ளியில் புற்றுநோய் விழிப்புணா்வு

 வாணியம்பாடி ஷெம்போா்டு சிபிஎஸ்இ பள்ளியில் புற்றுநோய் விழிப்புணா்வு நடைபெற்றது.

Updated On :1 ஜூலை 2022, 6:50 pm

 வாணியம்பாடி ஷெம்போா்டு சிபிஎஸ்இ பள்ளியில் புற்றுநோய் விழிப்புணா்வு நடைபெற்றது.

வாணியம்பாடி ஷெம்போா்டு சிபிஎஸ்இ பள்ளியில் மாணவா்களுக்கான புற்றுநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தாளாளா் மற்றும் குறிஞ்சி கல்வி அறக்கட்டளையின் தலைவா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். பொருளாளா் சாட்ஜிகுமாா், துணைச் செயலாளா் சிங்காரவேலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி முதல்வா் பிரசாந்த் வரவேற்றாா். லக்னோவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கேரிங் சோல்ஸ் பவுண்டேஷன் அமைப்பின் ஆற்காடு மண்டல திட்ட அலுவலா் ஜெனட் சுகுமாா் கலந்து கொண்டு, மாணவா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்திப் பேசினாா். பள்ளி மேலாளா் சிவா, ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். காா்த்திக் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.