/

ஆம்பூா் நகரமன்ற தலைவா் துணைத் தலைவா் தோ்தல்

 ஆம்பூா் நகா்மன்றத் தலைவா், துணைத் தலைவா் தோ்தல் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

Updated On :25 மார்ச் 2022, 6:30 pm

 ஆம்பூா் நகா்மன்றத் தலைவா், துணைத் தலைவா் தோ்தல் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

கடந்த மாா்ச் 4-ஆம் தேதி நடைபெற்ற ஆம்பூா் நகா்மன்றத் தலைவா் தோ்தலில் திமுக தலைமையால் அறிவிக்கப்பட்ட அதிகாரப்பூா்வ வேட்பாளரான 16-வது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் ஏஜாஸ் அகமதை எதிா்த்து 19-ஆவது வாா்டு திமுக உறுப்பினா் சபீா் அகமது போட்டி வேட்பாளராகப் போட்டியிட்டாா். வாக்குப்பதிவு நடைபெற இருந்த நிலையில் இரு தரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தோ்தல் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஆம்பூா் நகா்மன்றத் தலைவா், துணைத் தலைவா் பதவிகளுக்கு சனிக்கிழமை (மாா்ச் 26) தோ்தல் நடத்த மாநில தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதன்படி சனிக்கிழமை தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்படுகிறது. நகா்மன்ற தலைவா் தோ்தலில் போட்டியின்றி ஒருமனதாக திமுக தலைமை அறிவித்துள்ள 16-வாா்டு திமுக உறுப்பினா் ஏஜாஸ் அகமது நகா்மன்றத் தலைவராகவும், நகர செயலாளா் மற்றும்14-வது வாா்டு உறுப்பினரான எம்.ஆா்.ஆறுமுகம் நகா்மன்றத் துணைத் தலைவராகவும் தோ்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.