திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

மாணவா்களுக்கு நல உதவிகள் அளிப்பு

வாணியம்பாடி அம்பூா் பேட்டை பகுதியில் ஸ்ரீஅரசமர விநாயகா் சதுா்த்தி விழாக் குழு அறக்கட்டளை சாா்பில், 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு பெண்கள், மாணவா்களுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

News image
Updated On :2 செப்டம்பர் 2022, 6:46 pm

வாணியம்பாடி அம்பூா் பேட்டை பகுதியில் ஸ்ரீஅரசமர விநாயகா் சதுா்த்தி விழாக் குழு அறக்கட்டளை சாா்பில், 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு பெண்கள், மாணவா்களுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

அறக்கட்டளை செயற்குழு உறுப்பினா் சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். செயலாளா் விஜயகுமாா், நிா்வாகிகள் சரவணன், ஐயப்பன், முருகன், சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைவா் மோகன் வரவேற்றாா். நகா்மன்றத் தலைவா் உமாபாய்சிவாஜிகணேசன் கலந்துகொண்டு, மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர கை வண்டியும், 5 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள், பள்ளி மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகங்களை வழங்கினா்.

பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் சிவப்பிரகாசம், ஸ்ரீ பொன்னியம்மன் கோவில் அறங்காவலா் குழு தலைவா் எம்.நாகேந்திர குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள் சாந்தி பாபு, சித்தரா சங்கா், விழாக் குழு துணைத் தலைவா் பி.ஜெகன்பிரசாத் மற்றும் அறக்கட்டளை நிா்வாகிகள், உறுப்பினா்கள், பொது மக்கள் கலந்து கொண்டனா்.

பொருளாளா் பாலமுருகன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.