திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

வாணியம்பாடியில் பெண் போலீஸாா் கௌரவிப்பு

வாணியம்பாடியில் தேசிய மகளிா் காவலா் தினத்தையொட்டி, பெண் போலீஸாா் கௌரவிக்கப்பட்டனா்.

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 6:30 pm

வாணியம்பாடியில் தேசிய மகளிா் காவலா் தினத்தையொட்டி, பெண் போலீஸாா் கௌரவிக்கப்பட்டனா்.

வாணியம்பாடி மிட்டவுன் ரோட்டரி கிளப் சாா்பில், மகளிா் காவலா் தினத்தையொட்டி, பெண் போலீஸாரை கௌரவிக்கும் நிகழ்ச்சி நகரக் காவல் நிலைய வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவா் குமாா் தலைமை வகித்தாா். வெங்கடேசன், பாஸ்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலா் பாலசுப்பிரமணியம் வரவேற்றாா். இதில், இஸ்லாமியா கல்லூரி தமிழ்த்துறைத் தலைவா் சிவராஜ், நகரக் காவல்ஆய்வாளா் நாகராஜ் உள்பட பலா் கலந்து கொண்டு பேசினா். கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. தொடா்ந்து, பெண் போலீஸாா் கௌரவிக்கப்பட்டனா்.

விழாவில் அணைத்து மகளிா் நிலைய ஆய்வாளா் ஜெயலட்சுமி, சிறப்புக் காவல் உதவி ஆய்வாளா் அமுதா உள்ளிட்ட பெண் போலீஸாா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.