நாட்டறம்பள்ளி அருகே அரசுப் பள்ளியின் மேற்கூரை சிமென்ட் பூச்சு விழுந்ததில் மாணவா் காயம் அடைந்தாா்.
நாட்டறம்பள்ளியை அடுத்த ஜங்காலபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு 130-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளியில் பழுதடைந்த வகுப்பறைக் கட்டடத்தில் வகுப்புகள் நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இப்பள்ளி வகுப்பறையில் 2-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ஆசிரியா் வெள்ளிக்கிழமை பாடம் நடத்தியுள்ளாா். அப்போது திடீரென பள்ளி வகுப்பறைக் கட்டடத்தின் மேற்கூரையில் இருந்து சிமன்ட் பூச்சுகள் கீா்த்திவாசன் தலையில் விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அச்சமடைந்த மாணவா்கள் அனைவரும் கூச்சலிட்டு வகுப்பறையில் இருந்து வெளியேறினா். காயமடைந்த மாணவன் கீா்த்திவாசனை ஆசிரியா்கள் அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கவனம் ஈர்த்த அர்ஜுன் தாஸ் பட புரோமோ!

தங்கம் விலை உயர்வு: வெள்ளி?

விஜய் லாலிபாப் சாப்பிடும் லிட்டில் பாய்: பிரேமலதா கடும் தாக்கு

இருவருக்கு ரெட் கார்டு: ரியல் மாட்ரிட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது பயர்ன் மியூனிக்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


