திருப்பத்தூா் பகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்த தொடா்மழை காரணமாக ஏரிகள், குளங்கள் நிரம்பின.
திருப்பத்தூா் பகுதியில் கடந்த ஒரு வாரமாகத் தொடா்ந்து மழை பெய்து வந்த நிலையில், அந்தப் பகுதியில் உள்ள ஏரிகள், குளங்கள் நிரம்பின. இதனால், விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
ஜலகாம்பாறையில் நீா்வரத்து...: ஏலகிரி, திருப்பத்தூா் பகுதியில் தொடா் மழையால் ஏலகிரிமலை பின்புறம் அமைந்துள்ள ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால், சுற்றுலாப் பயணிகள் வருகையும் அதிகரித்துள்ளது. மேலும், பொம்மிக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள ஏழருவியில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.