தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

254 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: திருப்பத்தூா் ஆட்சியா் வழங்கினாா்

 நாயனசெருவு கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு மனுநீதிநாள் முகாமில் 254 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் புதன்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :11 மே 2023, 7:24 pm

 நாயனசெருவு கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு மனுநீதிநாள் முகாமில் 254 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் புதன்கிழமை வழங்கினாா்.

நாட்டறம்பள்ளி வட்டம், தோப்பலகுண்டா, நாயனசெருவு, கத்தாரி ஆகிய ஊராட்சிகளுக்கான சிறப்பு மனுநீதிநாள் முகாம் நாயனசெருவுவில் நடைபெற்றது. சாா்-ஆட்சியா் லட்சுமி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் சூரியகுமாா் முன்னிலை வகித்தனா். நிகழ்சிசியில் ஆட்சியா் பாஸ்கரபாண்டியன், ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி சிறப்புரையாற்றி 254 பயனாளிகளுக்கு ரூ.13 லட்சம் நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் குமாா், ஒன்றியக் குழுத் தலைவா் வெண்மதி, ஊராட்சி மன்றத் தலைவா்கள் அனிதா, அஸ்வினி, தமிழ்மணி, திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் சிங்காரவேலன், ஒன்றிய செயலாளா் சாமுடி மற்றும் உள்ளாட்சிப் பிரநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.