/

துஷார் தேஷ்பாண்டே சம்பவம்: குஜராத்தை பழிவாங்கி வெறித்தனமாகக் கொண்டாடிய ராஜஸ்தான்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெறித்தனமான கொண்டாட்டம் குறித்து...

News image

குஜராத்தை பழிவாங்கி ஆக்ரோஷமாக கொண்டாடிய ராஜஸ்தான் வீரர்கள். - படங்கள்: ஐபிஎல்/ பிசிசிஐ.

Updated On :5 ஏப்ரல் 2026, 5:37 am

குஜராத் டைட்டன்ஸ் அணியினை கடைசி ஓவரில் 11 ரன்களை எடுக்கவிடாமல் கட்டுப்படுத்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 210/6 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 204/8 ரன்கள் எடுத்தது.

கடைசி ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே செம்மையான ஏர்க்கர் பந்துகளை வீசி ( வைடு, 1, 1, 1, 0, விக்கெட், 0 ) 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

வெற்றிக்குப் பிறகு துஷார் தேஷ்பாண்டே, “இது எங்களுடைய மண்; நான் இங்கு இருக்கிறேன்” என்பது போல ஆக்ரோஷமாக சைகைக் காண்பிப்பார்.

இதற்கு முன்னதாக, ஏப்.10, 2024ல் ராஜஸ்தான் அணிக்கு எதிராக குஜராத் அணியின் ரஷித் கான் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து, “நான் இங்கு இருக்கிறேன்” என்பது போல வெற்றிக்குப் பிறகு சைகைக் காண்பிப்பார். அதற்குப் பதிலடியாக துஷார் தேஷ்பாண்டே இதனைச் செய்துள்ளார். இந்த விடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Summary

Rajasthan Royals Tushar Deshpande revenge to Gujarat Titans

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.