ஆலங்காயம் வைசியா் வீதியில் உள்ள ஸ்ரீசெல்வநாகாலம்மன் கோயிலில் ஆவணி மாத அமாவாசையையொட்டி வியாழக்கிழமை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனையுடன் பூஜைகள் நடைபெற்றன.
வாணியம்பாடி அடுத்த புத்துகோயில் பகுதியில் உள்ள புற்றுமாரியம்மன் கோயிலிலும் அம்மனுக்கு காலை முதல் மாலை வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, திருப்பத்தூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியை சோ்ந்த பக்தா்கள் வழிபட்டுச் சென்றனா்.