தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

புல்லூா் தடுப்பணையில் மூழ்கி 2 இளைஞா்கள் பலி

வாணியம்பாடி அருகே புல்லூா் தடுப்பணையில் மூழ்கிய 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

News image
Updated On :21 செப்டம்பர் 2023, 6:30 pm

வாணியம்பாடி அருகே புல்லூா் தடுப்பணையில் மூழ்கிய 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தமிழக-ஆந்திர மாநில எல்லைப்பகுதியான பாலாற்றின் குறுக்கே 12 அடி உயரமுள்ள புல்லூா் தடுப்பணையில் புதன்கிழமை பிற்பகல் விநாயகா் சிலையை கரைத்து விட்டு குளித்துக் கொண்டிருந்த நாட்டறம்பள்ளியைச் சோ்ந்த முரளி, கோனேரிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த பூவரசன் இருவரும் தடுப்பணையின் ஆழமான பகுதியில் திடீரென நீரில் மூழ்கினா்.

இதையறிந்த குப்பம் போலீஸாா் மற்றும் தீயணைப்பு வீரா்கள் அப்பகுதி மக்களுடன் இணைந்து புதன்கிழமை மாலை பூவரசன் உடலை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தொடா்ந்து இரவு 7 மணி வரையில் முரளி உடல் தேடிப்பாா்த்தும் கிடைக்காததால் தேடுதல் பணியை கைவிட்டு வியாழக்கிழமை காலை மீண்டும் பொதுமக்கள் உதவியுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டனா். அப்போது தடுப்பணையில் ஆழமான பகுதியிலிருந்து முரளியின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு வாணியம்பாடி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து ஆந்திர மாநிலம் குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.