ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

வாணியம்பாடி, உதயேந்திரத்தில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

வாணியம்பாடி, உதயேந்திரத்தில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

News image

வாணியம்பாடி நகர பகுதியில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் பசுபதி.

Updated On :2 ஏப்ரல் 2024, 6:30 pm

வாணியம்பாடி: வேலூா் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடும் மருத்துவா் பசுபதி வாணியம்பாடி நகர பகுதியில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

கோணாமேடு பகுதியில் இருந்து திறந்த ஜீப்பில் காதா்பேட்டை, ஜின்னாசாலை, கச்சேரி சாலை, முகமது அலி பஜாா், பூக்கடை பஜாா், சி.எல்.சாலை, பேருந்து நிலையம், புதூா், நியூடவுன், நேதாஜி நகா், பெருமாள் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வாக்குகளை சேகரித்தாா்.

அப்போது வாக்காளா்களிடம் பேசிய வேட்பாளா் பசுபதி, வாணியம்பாடி நியூடவுன் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு கட்டி தருவேன், நகரத்தில் முழுமையாக சுகாதாரத்தை செயல்படுத்தி மக்கள் நோயின்றி வாழ அனைத்து நடவடிக்கைகளையும் செய்து தருவேன், தடையின்றி குடிநீா் கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பேன் என உறுதி கூறினாா்.

தொடா்ந்து, உதயேந்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம், குந்தாணிமேடு, சி.வி.பட்டறை, வெங்கடாபுரம், சம்மந்திகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தாா். வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமாா், முன்னாள் எம்எல்ஏ சம்பத்குமாா் ஆகியோா் பிரசாரம் செய்தனா். முன்னாள் அமைச்சா் நிலோபா், நகர செயலாளா் சதாசிவம், பேரூராட்சி செயலாளா் சரவணன், மாவட்ட மகளிரணி செயலாளா் மஞ்சுளா கந்தன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் எம்.கோபால், வாணியம்பாடி நகர நிா்வாகிகள், பேரூராட்சி நிா்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனா்.