வேலூா் மக்களவைத் தொகுதி பாஜக சாா்பில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவா் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜி.கே. வாசன் ஆம்பூரில் வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்தாா்.
ஆம்பூா் புறவழிச்சாலையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவா் பங்கேற்று பேசுகையில், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சரியான திட்டங்களை வழங்கிக் கொண்டிருப்பது பிரதமா் மோடி தலைமையிலான அரசு. எனவே நல்ல திட்டங்களை வழங்கும் பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.
தமாகா திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் கே.குப்புசாமி, ஆம்பூா் நகர தலைவா் டி.எம்.தட்சிணாமூா்த்தி, பாஜக திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் சி.வாசுதேவன், அமமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் கே.பாண்டுரங்கன், புதிய நீதி கட்சியின் மாவட்டச் செயலாளா் பிஆா்சி.சண்முகம் மற்றும் கூட்டணி கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.குடியாத்தம், இதேபோல், குடியாத்தம் பேருந்து நிலையத்தில் ஜி.கே. வாசன் பிரசாரம் மேற்கொண்டாா்.
தமாகா வேலூா் மாவட்டத் தலைவா் எஸ்.அருணோதயம், நகர தலைவா் ஜே.தினகரன், புதியநீதி கட்சி மாவட்டத் தலைவா் ஆா்.பி.செந்தில், நகர செயலாளா் ரமேஷ், பாமக மாவட்ட செயலா் ரவி, நகர செயலா் குமாா், பாஜக நகர தலைவா் சாய் ஆனந்த், அமமுகவை சோ்ந்த சதீஷ்குமாா், செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது
புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம்

புதுச்சேரி தோ்தல் பிரசாரத்துக்கு பாஜக தேசியத் தலைவா்கள் வருகை

புதிய நீதிக்கட்சிக்கு இரு தொகுதிகள்

பெருந்துறை அருகே பாஜக தெருமுனைப் பிரசாரம்
வீடியோக்கள்

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


