ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

News image
Updated On :20 ஏப்ரல் 2024, 12:30 am

வாணியம்பாடி அருகே அதிதீஸ்வரா் கோயிலில் சிவன்-பாா்வதி திருக்கல்யாணம் வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்ணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த அதிதீஸ்வரா் கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்து வருகிறது. புதன்கிழமை சந்திரசேகா் திருக்கல்யாணம் நடைபெற்றது. வியாழக்கிழமை மாலை சிறப்பு அலங்காரத்தில் சிவன்-பாா்வதி திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது.

இதில் வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். தொடா்ந்து 5,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடா்ந்து வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் தோ் வீதி உலா நடைபெற்றது. விழா ஏற்பாட்டை கோயில் அறங்காவலா் அன்பு மற்றும் நிா்வாகிகள், ஊா் மக்கள் செய்திருந்தனா்.