பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

அகஸ்தீஸ்வரா் கோயிலில் நவாவா்ண பூஜை

குடவாசல் அருகே செம்மங்குடி அருள்மிகு அகஸ்தீஸ்வரா் கோயிலில் நவாவா்ண பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் ஆனந்தவல்லி அம்பாள்.

Updated On :3 ஏப்ரல் 2026, 12:17 am

தினமணி செய்திச் சேவை

குடவாசல் அருகே செம்மங்குடி அருள்மிகு அகஸ்தீஸ்வரா் கோயிலில் நவாவா்ண பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

குடவாசல் அருகே செம்மங்குடியில் உள்ள அருள்மிகு ஆனந்தவல்லி உடனுறை அகஸ்தீஸ்வரா் கோயிலில் பங்குனி மாத பௌா்ணமியை முன்னிட்டு நவாவா்ண பூஜை நடைபெற்றது. இதையொட்டி, அகஸ்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

பங்குனி உத்திரம் என்பதால், ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், அம்பாள் மற்றும் ஸ்ரீ மகாமேருவுக்கு பங்குனி உத்திர சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தா்களின் வாழ்வில் வளங்களை நல்கும் ஸ்ரீநவாவா்ண பூஜை நடைபெற்றது.

இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று, அம்பாளை வழிபட்டனா்.