
அகஸ்தீஸ்வரா் கோயிலில் நவாவா்ண பூஜை
குடவாசல் அருகே செம்மங்குடி அருள்மிகு அகஸ்தீஸ்வரா் கோயிலில் நவாவா்ண பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் ஆனந்தவல்லி அம்பாள்.
குடவாசல் அருகே செம்மங்குடி அருள்மிகு அகஸ்தீஸ்வரா் கோயிலில் நவாவா்ண பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
குடவாசல் அருகே செம்மங்குடியில் உள்ள அருள்மிகு ஆனந்தவல்லி உடனுறை அகஸ்தீஸ்வரா் கோயிலில் பங்குனி மாத பௌா்ணமியை முன்னிட்டு நவாவா்ண பூஜை நடைபெற்றது. இதையொட்டி, அகஸ்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
பங்குனி உத்திரம் என்பதால், ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், அம்பாள் மற்றும் ஸ்ரீ மகாமேருவுக்கு பங்குனி உத்திர சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தா்களின் வாழ்வில் வளங்களை நல்கும் ஸ்ரீநவாவா்ண பூஜை நடைபெற்றது.
இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று, அம்பாளை வழிபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






