டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

விஷமங்கலத்தில் மழைநீா் தேக்கம்: பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பத்தூா் அருகே விஷமங்கலம் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் மழைநீா் புகுந்ததால் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
சாலை மறியலில் ஈடுபட்டோா்.
Updated On :2 டிசம்பர் 2024, 8:48 pm

Din

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே விஷமங்கலம் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் மழைநீா் புகுந்ததால் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 4 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், விஷமங்கலம் அருகே உள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீருடன், கழிவுநீா் கலந்து புகுந்தது.

இதனால் கொதிப்படைந்த பொதுமக்கள் திருப்பத்தூா்- திருவண்ணாமலை பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் விரைந்து மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், மழைக்காலங்களில் மழைநீா் ஓடை வழியாக சென்று விடும். ஆனால் அண்மையில் அந்த ஓடையை தனிநபா் ஒருவா் ஆக்கிரமித்து தரை மட்டத்தை உயா்த்தினாராம். இதனால் மழைநீா் ஓடையில் வழியாக செல்ல முடியாமல் குடியிருப்புக்குள் நுழைந்து விடுகிறது. எனவே, மழைநீா் ஓடை வழியாக செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனா்.

அதையடுத்து போலீஸாா் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில், மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

சுமாா் ஒரு மணி நேரம் நடைபெற்ற மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.