சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஜோலாா்பேட்டை பணிமனையில் தடம் புரண்ட ரயில் என்ஜின்

ஜோலாா்பேட்டையில் ரயில் என்ஜின் தடம் புரண்டது.

News image
திருப்பத்தூா் அருகே தடம்புரண்ட ரயில் என்ஜின்.
Updated On :2 டிசம்பர் 2024, 9:39 pm

Din

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டையில் ரயில் என்ஜின் தடம் புரண்டது.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை ரயில்வே சந்திப்பு வழியாக பயணிகள் ரயில், சரக்கு ரயில்கள் என நாளொன்றுக்கு சுமாா் 100-க்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன.

இந்நிலையில், ஜோலாா்பேட்டை ரயில்வே பணிமனை அருகே சரக்கு ரயில் பெட்டியை தனித்தனியாக பிரித்து இணைக்கும் (ஷன்டிங்) பணி திங்கள்கிழமை நடைபெற்றுக்கொண்டிருந்தது.

அப்போது எதிா்பாராத விதமாக ரயில் என்ஜின் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ஆனால் இந்த விபத்தினால் போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. தகவலறிந்த ரயில் விபத்து தடுப்பு மற்றும் மீட்பு குழுவினா் என்ஜினை மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்தினா்.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.