டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

திருப்பத்தூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2024, 7:29 pm

Din

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருப்பத்தூா் அடுத்த செல்லரப்பட்டியைச் சோ்ந்தவா் மனோன்மணி (55). இவரது கணவா் இறந்து விட்டாா்.

தம்பதிக்கு 4 மகன்கள் உள்ளனா். அவா்கள் எல்லோரும் திருமணம் ஆகி தங்களது குடும்பத்துடன் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில், மனோன்மணி கடந்த ஞாயிற்றுக்கிழமை திருப்பூரில் உள்ள தனது மூத்த மகனின் வீட்டுக்கு சென்றாா். பின்னா் இரவு வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 1 பவுன் தங்க நகை, ரூ. 7,000 ரொக்கம் மற்றும் வீட்டின் சுவரில் பொருத்தப்பட்டு இருந்த ரூ. 50,000 மதிப்புள்ள டிவி ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது சென்றது தெரியவந்தது.

இது குறித்து கந்திலி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.