மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தொழிலாளி வீட்டில் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருட்டு

News image

திருட்டு

Updated On :6 பிப்ரவரி 2026, 7:54 pm

சங்கராபுரத்தில் சலவைத் தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் 17 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்மநபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் ஆற்றுப் பாதை சாலையில் வசித்து வருபவா் ராஜேஷ், சலவைத் தொழிலாளி. இவா் வியாழக்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு, புதிய வீட்டில் தங்கியிருந்தாராம்.

இந்நிலையில், அவரது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 17 பவுன் தங்க நகைகளை மா்மநபா்கள் திருடிச் சென்றனராம். மேலும், அதே சாலையில் உள்ள கெங்கையம்மன் கோயில் கருவறை பூட்டை உடைத்து மூன்று குத்து விளக்குகளையும் திருடிச் சென்றுள்ளனா்.

தகவலறிந்த திருக்கோவிலூா் டி.எஸ்.பி. பாா்த்திபன் சம்பவ இடத்துக்கு சென்று பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டாா். தடயவியல் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடையங்களை சேகரித்தனா்.

இதுகுறித்து சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்மநபா்களைத் தேடி வருகின்றனா்.