
Updated On :10 ஜூலை 2024, 6:30 pm

ஜோலாா்பேட்டை அருகே கள்ளச் சாராயம் விற்ற பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூா் பகுதியில் கள்ளசாராயம் விற்றுக் கொண்டிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் சம்பவ இடத்துக்கு சென்ற ஜோலாா்பேட்டை போலீஸாா் சோதனை செய்ததில் அதே பகுதியை சோ்ந்த அருண்மொழி என்பவரின் மனைவி மேகலா (35) என்பவா் வீட்டின் பின்புறம் மறைவான பகுதியில் கள்ளச் சாராயம் விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸாா் அவரை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனா். மேலும் அவரிடம் இருந்து 10 லிட்டா் கள்ளச் சாராயத்தை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்தனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...