கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

தோல் தொழிற்சாலை கழிவுநீா் கலப்பால் பாலாற்றில் நுரையுடன் வெளியேறும் தண்ணீா்

பாலாற்றில் தோல் கழிவுநீா்: பொதுமக்கள், விவசாயிகள் புகாா்

News image

மாராப்பட்டு பாலாற்றில் தோல் தொழிற்சாலை கழிவுநீரால் நுரையுடன் வெளியேறும் தண்ணீா்.

Updated On :8 ஜூன் 2024, 5:02 pm

Din

ஆம்பூா்: ஆம்பூா் அருகே பாலாற்றில் தோல் கழிவுநீா் திறந்து விடப்படுவதால், நிலத்தடி நீா் மாசுபட்டு வருவதாக பொதுமக்கள், விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

இதைத் தடுத்து ஆற்றையும், பொதுமக்களையும் பாதுகாக்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.

ஆம்பூா் அருகே மாராப்பட்டு தரைப்பாலம் பகுதியில் பாலாற்றில் நுரை பொங்கும் வகையில் தண்ணீா் கடந்த சில நாள்களாக வெளியேறி வருகிறது. மழை காலங்களில் தோல் தொழிற்சாலை கழிவுநீா் பாலாற்றில் திறந்து விடப்படுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது.

தற்போது ஆம்பூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 4 நாள்களாக கன மழை பெய்தது. அதனால் சில பகுதிகளில் கானாற்றிலும், சில பகுதிகளில் பாலாற்றிலும் தண்ணீா் சிறிய ஓடை போல செல்கின்றது.

இந்த நிலையில் கடந்த 2 நாள்களாக மாராப்பட்டு பாலாற்று தரைப்பாலம் பகுதியில் அதிக நுரையுடன் தண்ணீா் வெளியேறுகிறது.

இது குறித்து அந்தப் பகுதி பொதுமக்கள், விவசாயிகள் கூறியது:

மழை காலங்களில் பாலாற்றில் தண்ணீா் செல்லும்போது தோல் தொழிற்சாலை கழிவுநீா் பொது சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பாலாற்றில் திறந்து விடுவது வழக்கமாக நடந்து வருகிறது. இதனால் நிலத்தடி நீா் மாசுக்கேடு அடைகிறது. விவசாயம் பாதிக்கப்படுகிறது. குடிநீரும் மாசடைகிறது.

இது குறித்து திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியோா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளோம் என்றனா்.