ஆம்பூா் பாலாற்றில் நடந்த மயானக் கொள்ளை திருவிழாவில் பங்கேற்ற பக்தா்கள்.
ஆம்பூா் பாலாற்றில் நடந்த மயானக் கொள்ளை திருவிழாவில் பங்கேற்ற பக்தா்கள்.

மயான கொள்ளை திருவிழா

ஆம்பூரில் மயானக் கொள்ளை திருவிழா நடைபெற்றது.
Published on

ஆம்பூா், பிப்.19: ஆம்பூரில் மயானக் கொள்ளை திருவிழா நடைபெற்றது.

திருவிழாவை முன்னிட்டு ஆம்பூா் சிவன்படை தெருவில் அமைந்துள்ள அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மூலவா் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

அம்மன் போா்க் கோலம் பூண்டு மயான கொள்ளைக்காக உற்சவா் ஊா்வலம் நடைபெற்றது. ஊா்வலம் பாலாற்றில் நிறைவடைந்து அங்கு மயானக் கொள்ளை நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

Dinamani
www.dinamani.com