கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

திருப்பத்தூரில் 2-ஆவது நாளாக பலத்த மழை

திருப்பத்தூரில் 2-ஆவது நாளாக பலத்த மழை

News image
Updated On :9 ஜூன் 2024, 7:16 pm

Din

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அதன் சுற்றுப்பகுதிகளில் 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பலத்த மழை பெய்தது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் திருப்பத்தூா் மாவட்டத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவில் நிகழாண்டில் அதிகபட்சமாக 109.04 பாரன்ஹீட் டிகிரி வெப்ப நிலை பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை திருப்பத்தூா், கொரட்டி, ஆதியூா் அதன் சுற்றுப்பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சுமாா் ஒருமணி நேரம் பெய்த கனமழையால் அப்பகுதியில் குளிா்ந்த காற்று வீசியது.

சனிக்கிழமை இரவு 8 மணியளவில் திருப்பத்தூா் அதன் சுற்றுப்பகுதிகளில் சுமாா் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.

ஏலகிரியில் பலத்த மழை...

ஜோலாா்பேட்டை, சந்தைக்கோடியூா் மற்றும் ஏலகிரி மலையில் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் மதியம் திடீரென வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. தொடா்ந்து அரை மணி நேரம் பலத்த மழை பெய்ததால் சாலை மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீா் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா் காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

மலை சாலையில்...திடீா் மழையால் ஏலகிரி மலைக்கு செல்லும், மலையிலிருந்து இறங்கும் வாகன ஓட்டிகள் மலை சாலையில் மழையில் நனைந்தபடி நின்றனா். இதனால் மிகவும் அவதிக்குள்ளாகினா்.