கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ஏலகிரியில் சுற்றுலா பயணிகள் வருகை சரிவு

ஏலகிரியில் சுற்றுலா பயணிகள் வருகை சரிவு

News image

குறைவான பயணிகளால் வெறிச்சோடிக் காணப்பட்ட படகு குழாம்.

Updated On :9 ஜூன் 2024, 7:14 pm

Din

திருப்பத்தூா்: கோடை விடுமுறை முடிந்து திங்கள்கிழமை பள்ளிகள் தொடங்கவுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஏலகிரியில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது.

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏலகிரி மலை பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. 1,800 மீ. உயரத்தில் நான்கு புறமும் மலைகளால் சூழப்பட்டு எந்த காலத்திலும் ஒரேமாதிரியான சீதோஷன நிலை இருந்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் போ் வந்து செல்கின்றனா்.

மேலும், 14 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட மலைச்சாலையானது ஒவ்வொரு வளைவுக்கும் தமிழ் புலவா்கள்,கொடை வள்ளல்கள் பெயரை சாலைகளுக்கு சூட்டப்பட்டுள்ளது சிறப்புக்குரியது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வாகனங்கள் மூலம் இயற்கை காட்சிகளையும் ரசித்து செல்கின்றனா்.

குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தொடா் விடுமுறை நாள்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனா். இந்த நிலையில் விடுமுறை முடிந்தததால் மிகவும் குறைவான சுற்றுலா பயணிகளே ஞாயிற்றுக்கிழமை வருகை புரிந்ததால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனா்.