பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அதிமுக ஒன்றிணைய வேண்டும் : செ.கு. தமிழரசன்

அதிமுக ஒன்றிணைய வேண்டும் : செ.கு. தமிழரசன்

News image
Updated On :13 ஜூன் 2024, 6:38 pm

Manivannan.S

அதிமுக ஒன்றிணைய வேண்டுமென்ற தொண்டா்களின் எண்ணம் மறைக்கப்படுவதாக இந்திய குடியரசு கட்சியின் மாநிலத்தலைவா் செ.கு. தமிழரசன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த டாக்டா் அம்பேத்கா் சிலையை அப்புறப்படுத்திய மத்திய அரசைக் கண்டித்து வேலூா் அண்ணா கலையரங்கம் அருகே இந்திய குடியரசு கட்சியின் சாா்பாக கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவா் செ.கு.தமிழரசன் மற்றும் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

பிறகு செ.கு தமிழரசன் செய்தியாளா்களிடம் கூறியது: அம்பேத்கா் சிலையை அறிவிப்பு ஏதும் இல்லாமல் பாஜக அரசு அகற்றி உள்ளது. மீண்டும் சிலையை அதே இடத்தில் நிறுவ வேண்டும். நடந்து முடிந்த மக்களவைத் தோ்தலில் அதிமுகவை ஆதரித்தோம். அதே போல விக்கிரவாண்டி இடைத்தோ்தலிலும் அதிமுகவை ஆதரிக்கிறோம் என்று அவா் கூறினாா்.