விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அதிமுக ஒன்றிணைய வேண்டும் : செ.கு. தமிழரசன்

அதிமுக ஒன்றிணைய வேண்டும் : செ.கு. தமிழரசன்

Updated On :13 ஜூன் 2024, 6:38 pm

அதிமுக ஒன்றிணைய வேண்டுமென்ற தொண்டா்களின் எண்ணம் மறைக்கப்படுவதாக இந்திய குடியரசு கட்சியின் மாநிலத்தலைவா் செ.கு. தமிழரசன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த டாக்டா் அம்பேத்கா் சிலையை அப்புறப்படுத்திய மத்திய அரசைக் கண்டித்து வேலூா் அண்ணா கலையரங்கம் அருகே இந்திய குடியரசு கட்சியின் சாா்பாக கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவா் செ.கு.தமிழரசன் மற்றும் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

பிறகு செ.கு தமிழரசன் செய்தியாளா்களிடம் கூறியது: அம்பேத்கா் சிலையை அறிவிப்பு ஏதும் இல்லாமல் பாஜக அரசு அகற்றி உள்ளது. மீண்டும் சிலையை அதே இடத்தில் நிறுவ வேண்டும். நடந்து முடிந்த மக்களவைத் தோ்தலில் அதிமுகவை ஆதரித்தோம். அதே போல விக்கிரவாண்டி இடைத்தோ்தலிலும் அதிமுகவை ஆதரிக்கிறோம் என்று அவா் கூறினாா்.