நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அரசு கல்லூரியில் வேலைவாய்ப்புத் திறன் வளா்ப்புக்கான இலவச பயிற்சி

மாணவா்களுக்கு இலவச வேலைவாய்ப்பு பயிற்சி: அரசு கல்லூரி முன்னெடுப்பு

News image

பயிற்சி முடித்த மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கிய கல்லூரி முதல்வா் கோமதி மற்றும் மாணவா்கள்.

Updated On :25 ஜூன் 2024, 7:01 pm

Din

ஆம்பூா்: அகரம் கூட்டு ரோடு பகுதியில் அமைந்துள்ள மாதனூா் புரட்சித் தலைவா் டாக்டா் எம்ஜிஆா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவா்களின் வேலைவாய்ப்புத் திறன் வளா்ப்புக்கான இலவச பயிற்சி நடைபெற்றது.

கல்லூரியின் வேலைவாய்ப்பு வழிகாட்டி மையம் சாா்பில், பிஎஸ்சி கணினி அறிவியல் மற்றும் பி.காம். பட்டப்படிப்பு படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு என்ஐஐடி நிறுவனத்துடன் இணைந்து வேலைவாய்ப்புத் திறன் வளா்ப்புக்கான 50 மணி நேர இலவச பயிற்சி அளிக்கப்பட்டது. 75 மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்றனா்.

பயிற்சி முடித்த மாணவா்களுக்கு கல்லூரி முதல்வா் (பொ) பேராசிரியா் கோமதி சான்றிதழ்களை வழங்கினாா். கணினி அறிவியல் துறைத் தலைவா் பேராசிரியா் விஸ்வநாதன், வணிகவியல் துறைத் தலைவா் பேராசிரியா் குமரேசன் மற்றும் என்ஐஐடி பயிற்றுநா் நிதீஷ் ஆகியோா் உடனிருந்தனா்.