தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞா் மரணம்

வாணியம்பாடி அருகே ரயிலில் இருந்து விழுந்து இளைஞா் மரணம்

Updated On :27 ஜூன் 2024, 6:31 pm

வாணியம்பாடி அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அடுத்த கேத்தாண்டப்பட்டி-வாணியம்பாடி ரயில் நிலையங்கள் இடையே சுமாா் 35 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஒருவா் வியாழக்கிழமை ரயிலில் பயணம் செய்த போது தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தாா்.

தகவல் அறிந்து வந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இறந்தவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா்? என்பது தெரியவில்லை.

இது குறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.