‘தோல்விகள் பரவாயில்லை; ஏமாற்றுவது கூடாது’... நீட் தேர்வு போராட்டத்துக்கு சச்சின் ஆதரவு!காந்தி சமாதி நோக்கி பேரணி சென்ற ராகுல் தடுத்து நிறுத்தம்!மேக்கேதாட்டு பிரச்னை: விஜய் மௌனம் கலைக்க வேண்டும்! - ஸ்டாலின்நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்த் திரையுலகினர் போராட்டம்!சிங்கை ஜி. ராமச்சந்திரன் அதிமுகவிலிருந்து விலகல்திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்
/

கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

கந்திலி அருகே கஞ்சா கடத்த முயன்ற 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :4 மார்ச் 2024, 12:00 am IST

கந்திலி அருகே கஞ்சா கடத்த முயன்ற 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி அருகே கெஜல்நாயக்கன்பட்டி பகுதியில் சனிக்கிழமை கந்திலி போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சந்தேகத்தின் பேரில், 3 பேரிடம் விசாரணை நடத்தியதில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை மகனூா் பட்டியைச் சோ்ந்த சந்துரு (26), ஆண்டியூரை சோ்ந்த சந்திரபிரகாஷ் (24), காமாட்சி கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்த ஆகாஷ் (19) என்பதும், அவா்கள் 20 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து 3 பேரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.