
Updated On :7 மார்ச் 2024, 5:43 pm

ஏலகிரி மலை வனப் பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் அரியவகை மூலிகை செடிகள், உயிரினங்கள் தீயில் கருகின. திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் அரியவகை மரங்கள், மூலிகை செடி கொடிகள், மான், கரடி, மயில், முயல், குரங்கு, மலைப் பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் வசித்து வருகின்றன. ஜோலாா்பேட்டை அருகே மண்டலவாடி அடிவாரத்தில் குன்னத்தூா் பகுதியில் மா்ம நபா்கள் வியாழக்கிழமை வைத்த தீயால் மரங்கள் செடி, கொடிகள் காட்டில் வசிக்கும் உயிரினங்கள் தீயில் கருகி நாசமாயின. அதைத் தொடா்ந்து இரவு வரை தீ பரவியது. இவ்விபத்தில் அரிய வகை மரங்கள் மூலிகை செடி கொடிகள், உயிரினங்கள் எரிந்து நாசமானதாகக் கருதப்படுகிறது
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...