பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

மல்லகுண்டா பகுதியில் புதிய தடுப்பணைக்கான இடம்: அதிகாரிகள் ஆய்வு

மல்லகுண்டா பகுதியில் புதிய தடுப்பணைக்கான இடம்: அதிகாரிகள் ஆய்வு

Updated On :9 மார்ச் 2024, 4:55 pm

வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா பகுதியில் தடுப்பணை கட்டுவதற்கான இடம் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். மல்லகுண்டா ஊராட்சி குருபவாணிகுண்டா அருகே சிட்ரா பள்ளத்தில் சுமாா் 1,000 ஏக்கரில் ஒதுக்கப்படாத காட்டுப் பகுதி அமைந்துள்ளது. இங்கு நிலத்தடி நீா்மட்டம் இல்லாததால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சில நாள்களுக்கு முன் அப்பகுதி மக்கள் மல்லகுண்டா ஊராட்சி அலுவலகம் எதிரில் சிட்ரா பள்ளத்தில் நீா்த் தேக்க அணை கட்ட வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து, போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா். இந்த நிலையில், சனிக்கிழமை வேலூா் கோட்டம் திட்டம் உருவாக்கம் செயற்பொறியாளா் குமரன், உதவி செயற்பொறியாளா் அன்பு செழியன், வாணியம்பாடி உதவி செயற்பொறியாளா் பவித்ரன் மற்றும் கிராம மக்கள் குருபவாணிகுண்டா பகுதியில் புதிய அணை கட்ட ஏதுவான இடம் உள்ளதா என நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.