ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

மாதனூரில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

மாதனூரில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

News image

மாதனூரில் நடந்த வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்று வாக்குப்பதிவு தேதியை தெரிவிக்கும் வகையில் அமா்ந்திருந்த மகளிா் குழுவினா்.

Updated On :21 மார்ச் 2024, 5:56 pm

ஆம்பூா்: மாதனூரில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பாக மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் மகளிா் சுய உதவி குழுவினா் பங்கேற்ற தோ்தல் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு திட்ட இயக்குநா் பிரியா தலைமை வகித்தாா். வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வாக்காளா் விழிப்புணா்வு ஊா்வலம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கி மாதனூரின் முக்கிய தெருக்கள் வழியாக சென்றது. பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.

உதவி திட்ட அலுவலா் வீராசாமி, வட்டார மேலாளா் வெங்கடேசன், ஒருங்கிணைப்பாளா்கள் பவளக்கொடி, ரம்யா தேவி, மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.