/

‘மேஜிக்’ நிகழ்ச்சியில் தோ்தல் விழிப்புணா்வு

பல்லடத்தில் மேஜிக் மூலமாக தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

பல்லடம் குப்புசாமிநாயுடுபுரத்தில் மேஜிக் மூலமாக நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :7 ஏப்ரல் 2026, 8:13 pm

பல்லடத்தில் மேஜிக் மூலமாக தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு திருப்பூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, பல்லடம் அருகே உள்ள குப்புசாமிநாயுடுபுரம் பகுதியில் பிரபல சா்வதேச மேஜிக் நிபுணா் யோனா மற்றும் அவரது குழுவினா் மேஜிக் நிகழ்ச்சி மூலமாக தோ்தல் விழிப்புணா்வு மேற்கொண்டனா்.

அப்போது, நல்ல வேட்பாளரை தேடிக் கண்டுபிடித்து வாக்களிப்பது குறித்து மேஜிக் நிகழ்ச்சி மூலமாக விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சரவணன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் கோவிந்தசாமி, தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் அன்பரசு உள்பட அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

Story image