ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைப்பு

ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைப்பு

News image
Updated On :22 மார்ச் 2024, 5:17 pm

ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் ஆம்பூா் சட்டப்பேரவைத்மன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச் சாவடிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் வெள்ளிக்கிழமை கொண்டு சென்று வைக்கப்பட்டன. திருப்பத்தூா் மாவட்டத்தில் மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, சம்பந்தப்பட்ட சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட வாக்குச் சாவடிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் திருப்பத்தூரிலிருந்து கொண்டு வரப்பட்டு உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் வட்டாட்சியா் மோகன் மற்றும் வருவாய்த் துறை அலுவலா்களால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது. ஆம்பூா் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட 245 வாக்குச் சாவடிகளுக்கு 296 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 296 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 320 விவிபேட் இயந்திரங்கள் உள்பட மொத்தம் 912 இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு அறை முன்பு சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. மேலும் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.